உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / யானைகள் விரட்டும் பணியில் வனத்துறையினர்

யானைகள் விரட்டும் பணியில் வனத்துறையினர்

குன்னுார்;குன்னுார் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் மீண்டும், 11 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையோர வனப்பகுதியில் முகாமில் இருந்த காட்டு யானைகள் சமவெளி பகுதிக்குச் சென்றன.இந்நிலையில், சமவெளி பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மீண்டும் குன்னுார் வந்த, 11 காட்டு யானைகள் கடந்த, 3 நாட்களாக, மரப்பாலம், ரன்னி மேடு பகுதியில் முகாமிட்டு நஞ்சப்பா சத்திரம் பகுதிக்கு இடம் பெயர்ந்தது.வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில், வனவர் ராஜ்குமார், வனக்காவலர் திலீப் மற்றும், 15 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து, வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி