உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இலங்கையில் விடுதலையான 3 மீனவர்கள் வீடு திரும்பினர்

இலங்கையில் விடுதலையான 3 மீனவர்கள் வீடு திரும்பினர்

ராமேஸ்வரம்:- இலங்கையில் சிறை தண்டனையில் இருந்து விடுதலையான ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் விமானத்தில் சென்னை வந்திறங்கி வீட்டுக்கு வந்தனர்.ராமேஸ்வரத்தில் இருந்து பிப்.4ல் மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் ராபர்ட் 40, பெக்கர் 38, ஜால்சன் 42, ஆகியோர் படகு டிரைவர் என்பதால் எல்லைதாண்டிவந்து மீன்பிடித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர். இலங்கை யாழ்ப்பாணம் நீதிமன்றம் மூவருக்கும் தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்ததால் கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டனர்.இம்மீனவர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தனர். ஏப்.30ல் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சூசைதாசன் ,மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.இதன் பின் மீனவர்களை கொழும்பு மெரிகானா முகாமில் போலீசார் தங்க வைத்தனர். பின்னர் அங்கிருந்து விமான மூலம் நேற்று முன்தினம் மாலை சென்னை வந்திறங்கினர். இவர்களை ராமேஸ்வரம் மீன்துறை அதிகாரிகள் வரவேற்று நேற்று ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை