உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / செல்லி அம்மன் கோயிலில் 3008 பால் குடம் ஊர்வலம்

செல்லி அம்மன் கோயிலில் 3008 பால் குடம் ஊர்வலம்

முதுகுளத்துார்: -முதுகுளத்துார் செல்லி அம்மன் கோயில் 48ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு கடந்த 8 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. வருடாபிஷேகம் மற்றும் புண்ணியதானம் நிகழ்ச்சி நடந்தது.முக்கிய நிகழ்ச்சியான முதுகுளத்துார் முருகன் கோயிலில் இருந்து காப்பு கட்டிய 3000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து காந்தி சிலை, பஸ் ஸ்டாண்ட், வழிவிடு முருகன் கோயில், வடக்கூர் வழியாக செல்லி அம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. பூக்குழி இறங்கும் இடத்தில் தச்சு செய்யப்பட்டது. மாலை 6:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் செல்லி அம்மன் திருவீதி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்