உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நாட்டுப்படகு மீனவர்கள் 33 பேர் கைது

நாட்டுப்படகு மீனவர்கள் 33 பேர் கைது

ராமேஸ்வரம்:நடுக்கடலில் நாட்டுப் படகில் மீன் பிடித்து கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். நேற்று காலை ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் மற்றும் பாம்பனில் இருந்து மன்னார் வளைகுடா ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற நான்கு மீனவர்களின் நாட்டு படகுகளில், 33 மீனவர்கள் மீன் பிடித்தனர். இரண்டு கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கி முனையில். நான்கு படகுகளையும் பிடித்தனர். படகுகளில் இருந்த 33 மீனவர்களையும் கைது செய்து, புத்தளம் மாவட்டம் கல்பெட்டியா கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர்.எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்கள் மீது வழக்கு பதிந்து, சிறையில் அடைக்க உள்ளதாக கல்பெட்டியா போலீசார் தெரிவித்தனர்.அடுத்தடுத்து கைது செய்யப்படுவதால், ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி