உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடினர்

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடினர்

ராமேஸ்வரம் : பங்குனி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள்.தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேற்று ராமேஸ்வரம் வந்தனர். அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்தனர். அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி விட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடினார்கள். கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தனர்.அமாவாசையால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட், கோயில் ரதவீதி, சன்னதி தெரு, அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை