உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி - மேலக்கொடுமலுார் முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை ஆடி கிருத்திகை விழா கோலாகலம்

பரமக்குடி - மேலக்கொடுமலுார் முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை ஆடி கிருத்திகை விழா கோலாகலம்

பரமக்குடி : ஆடி கிருத்திகை விழாவையொட்டி பரமக்குடியில் இருந்து மேலக்கொடுமலுார் முருகன் கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர்.பரமக்குடி அருகே 12 கி.மீ.,ல் மேலக்கொடுமலுார் குமரக்கடவுள் என்ற சுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்கு தீர்த்தம், ஸ்தல விருட்சம் உடைமரம் ஆகும். ஒவ்வொரு கிருத்திகை விழாவிலும் பக்தர்கள் இரவு முழுவதும் அபிஷேகம் நடத்துவது வழக்கம்.இதன்படி ஆடி கிருத்திகை விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு மேலக்கொடுமலுார் பாதயாத்திரை குழு சார்பில் 40 வது ஆண்டு பால்குடம், பறவை காவடி எடுத்து பாதயாத்திரை சென்றனர். அங்கு இரவு 10:00 மணி துவங்கி அபிஷேக ஆராதனைகள் நடந்தது.*பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயிலில் நேற்று முன்தினம் இரவு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்தனர். இதே போல் பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் ஆடி கிருத்திகை விழா கோலாகலமாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி