உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பேராயிரம் மூர்த்தி அய்யனார் கோயில் பொங்கல் விழா

பேராயிரம் மூர்த்தி அய்யனார் கோயில் பொங்கல் விழா

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே இறைச்சிகுளத்தில் பேராயிரம் மூர்த்தி அய்யனார்கோயில் வைகாசி பொங்கல் விழா நடந்தது.தினந்தோறும் அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. காப்பு கட்டியபக்தர்கள் விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம் துாக்கி கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின் பேராயிரம் மூர்த்தி அய்யனார் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால், சந்தனம்,மஞ்சள் உட்பட 16 வகை அபிஷேகம், தீபாராதனை நடந்தது.பொங்கல் வைத்தும், கிடா வெட்டி மக்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ