திருப்புல்லாணி: ராமநவமியை முன்னிட்டு திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் தெர்ப்பசயன ராமர் சன்னதியில் அபிேஷக, பூஜைகள் நடந்தது. சித்திரை மாதத்தின் வளர்பிறை நவமி திதி மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமபிரானின் ஏழாவது அவதாரமாகும்.நேற்று ராம நவமியை முன்னிட்டு திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் தெர்ப்ப சயன ராமர் சன்னதி அருகே உற்ஸவ மூர்த்திகளான ராமபிரான், சீதா பிராட்டியார், லட்சுமணன், ஆஞ்சநேயர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு விசேஷ திருமஞ்சனமும் சாற்று முறை கோஷ்டி பாராயணமும் நடந்தது.சன்னதி அருகே உள்ள பட்டாபிஷேக ராமருக்கு சிறப்பு பூஜைகள் அலங்கார தீபாராதனைகள் நடந்தது.சுக்லபட்ச பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரையில் உள்ள ஒன்பது நாட்களில் விரதம் இருக்கும் பக்தர்கள் நேற்று ராமநவமியை முன்னிட்டு விரதத்தை பூர்த்தி செய்தனர்.ராம நாமத்தை உச்சரித்து பஜனை, பாராயணம், நாமாவளி உள்ளிட்டவைகளை செய்தனர்.கோயில் ஸ்தானிய பட்டாச்சாரியார்களால் பூஜைகள் நிறைவேற்றப்பட்டன. பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். இதுபோல ராமநவமியை முன்னிட்டு ராமேஸ்வரம் காட்டுபிள்ளையார் கோவில் தெரு ஆஞ்சநேயர் கோயிலில் அலங்கராத்தில் ராமர், சீதா, லட்சுமணன், ஆஞ்சநேயர் சிறப்பு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர். ராமநவ மி வி ழவில் இன்று திருக்கல்யாணம்
பரமக்குடி: பரமக்குடி அனுமார் கோதண்ட ராமசாமி கோயிலில் ராமநவமி விழா நடந்தது. இன்று (ஏப்.18) காலை திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. இக்கோயிலில் ராமநவமி விழா ஏப்.9ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில் அபிஷேகம், தீபாராதனைகள் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடக்கிறது. நேற்று முன்தினம் மாலை புத்திர காமேஷ்டி யாகம் நடத்தப்பட்டு, பாயாசம் பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று காலை ராம ஜனனம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது ராமர், சீதை, லட்சுமணன், அனுமனுக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் வெள்ளிக்கவசத்தில் வில், அம்பு ஏந்தி ராமர் அருள்பாலித்தார். பக்தர்களுக்க நெல் பிரசாதமாக வழங்கப்பட்டது. இன்று காலை 10:30 மணிக்கு கோதண்டராமசாமி, சீதாபிராட்டி திருக்கல்யாணம் நடக்கிறது.