மேலும் செய்திகள்
மதுரை--ராமேஸ்வரம் இடையே மெமு ரயில்கள் இயக்கப்படுமா
1 hour(s) ago
பா.ஜ., கட்சியின் 2வது பூத் கமிட்டி ஆலோசனை
3 hour(s) ago
அக்.11ல் ரேஷன் குறை தீர் முகாம்
3 hour(s) ago
நாளை (அக்.9) மின்தடை
3 hour(s) ago
கடலாடி: கடலாடி மற்றும் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கான குடிநீர் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இங்குள்ள பெருவாரியான கிராமங்களில் 50 ஆயிரம் முதல் 2 லட்சம் லி., கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன. இவற்றில் முறையாக குளோரினேசன் செய்து விநியோகம் செய்ய வேண்டும். பெரும்பாலான மேல்நிலைத் தொட்டிகள் ஆண்டுக்கணக்கில் சுத்தம் செய்யப்படாமல் பாசி படர்ந்து சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. எனவே மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியை துாய்மைப்படுத்தி பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க வேண்டும்.சுகாதாரமற்ற குடிநீரை பருகுவதால் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
1 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago