உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அபிராமம் ரோட்டில் உலா வரும் தெரு நாய்கள்: மக்கள் அச்சம்

அபிராமம் ரோட்டில் உலா வரும் தெரு நாய்கள்: மக்கள் அச்சம்

கமுதி: -கமுதி அருகே அபிராமம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ரோட்டில் கூட்டமாக உலாவரும் தெருநாய்களால் மக்கள் அச்சப்படுகின்றனர்.கமுதி அருகே அபிராமம் பேரூராட்சியில்​ 15 வார்டுகளில் 40க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. போக்குவரத்து மிகுந்த ரோட்டில் நாய்கள் கூட்டமாக உலா வருகின்றன. இதனால் டூவீலர் விபத்துக்கள் நடக்கிறது. இரவுநேரத்தில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு அச்சப்படுகின்றனர். அபிராமம்- - கமுதி ரோடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே திரியும் நாய்களால் மாணவர்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். இருமாதங்களுக்கு முன்பு நாய் கடித்ததில் 3 வயது சிறுமி காயம் அடைந்ததுள்ளார். தெருநாய்களை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ