உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பஸ் படிக்கட்டில் தொங்கும் பயணம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்துங்க கண்டுகொள்ளாத அதிகாரிகள்

பஸ் படிக்கட்டில் தொங்கும் பயணம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்துங்க கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ராமநாதபுரம், -ராமநாதபுரத்தில் அரசு, தனியார் பஸ்களில் தினமும் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்கின்றனர். இதனை ஏனோ அதிகாரிகள் கண்டும் காணாதது போல உள்ளனர்.ராமநாதபுரம் நகர் மட்டுமின்றி கிராமங்களிலிருந்து கல்லுாரி, பள்ளிகளில் படிக்க பல ஆயிரம் மாணவர்கள் வந்து செல்கின்றனர். இவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதி பஸ் போக்குவரத்து வசதி இல்லை. இதனால் பள்ளி, கல்லுாரி, அலுவலகம் திறப்பு, முடியும் காலை, மாலை நேரங்களில் ஆபத்தை உணராமல் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வது வாடிக்கையாகியுள்ளது. இது தெரிந்தும் ராமநாதபுரத்தில் ஏனோ அதிகாரிகள் கண்டும் காணாதது போல உள்ளனர். இவ்விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் பள்ளி முடியும் நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்கி மாணவர்களின் உயிரை காக்க கலெக்டர் விஷ்ணு சந்திரன், எஸ்.பி., சந்தீஷ் உத்தரவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை