மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
19 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
19 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
19 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
19 hour(s) ago
ராமநாதபுரம், -ராமநாதபுரத்தில் அரசு, தனியார் பஸ்களில் தினமும் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்கின்றனர். இதனை ஏனோ அதிகாரிகள் கண்டும் காணாதது போல உள்ளனர்.ராமநாதபுரம் நகர் மட்டுமின்றி கிராமங்களிலிருந்து கல்லுாரி, பள்ளிகளில் படிக்க பல ஆயிரம் மாணவர்கள் வந்து செல்கின்றனர். இவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதி பஸ் போக்குவரத்து வசதி இல்லை. இதனால் பள்ளி, கல்லுாரி, அலுவலகம் திறப்பு, முடியும் காலை, மாலை நேரங்களில் ஆபத்தை உணராமல் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வது வாடிக்கையாகியுள்ளது. இது தெரிந்தும் ராமநாதபுரத்தில் ஏனோ அதிகாரிகள் கண்டும் காணாதது போல உள்ளனர். இவ்விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் பள்ளி முடியும் நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்கி மாணவர்களின் உயிரை காக்க கலெக்டர் விஷ்ணு சந்திரன், எஸ்.பி., சந்தீஷ் உத்தரவிட வேண்டும்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago