உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கட்டி முடித்து திறக்கப்படாமல் காட்சிப்பொருளான கட்டடம்

கட்டி முடித்து திறக்கப்படாமல் காட்சிப்பொருளான கட்டடம்

கமுதி: கமுதி அருகே பேரையூர் தலைமை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில் ஆய்வகம் செயல்பட்டு வந்தது. இதனால் நோயாளிகள், பணியாளர்கள் அச்சப்பட்டனர். புதிய ஆய்வக கட்டடம் கட்டுவதற்கு பலமுறை கோரிக்கை விடுத்து வந்த நிலையில் ஓராண்டிற்கு முன்பு புதிய கட்டடம் கட்டுவதற்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு தற்போது கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் கட்டடம் திறக்கப்படாமல் காட்சி பொருளாக உள்ளது.பேரையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர்​ சிகிச்சை பெறுகின்றனர். நோயாளிகளின் நலன் கருதி புதிய ஆய்வக கட்டடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல் கமுதி அருகே தோப்படைப்பட்டி கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.30 லட்சத்தில் கூடுதல் கட்டடம் கட்டி முடித்தும் திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. முதல்வர் உத்தரவுக்காக புதிய கட்டடங்கள் திறக்கப்படாமல் காட்சிப் பொருளாக உள்ளதாக அதிகாரிகள் கூறினர். எனவே கட்டடங்களை திறப்பதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை