உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொடர் விடுமுறை: காரங்காட்டில் படகு சவாரிக்கு குவிந்த பயணிகள்     

தொடர் விடுமுறை: காரங்காட்டில் படகு சவாரிக்கு குவிந்த பயணிகள்     

திருவாடானை, : தொண்டி அருகே காரங்காட்டில் தொடர் விடுமுறையால் கடலில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தொண்டி அருகே காரங்காடு கடற்கரை சதுப்பு நிலக்காடுகளை உள்ளடக்கி அமைந்துள்ளது. இயற்கை தந்த கொடையாக அனைவருடைய மனதை கவரும் வகையில் மாங்குரோவ் காடுகள் அடர்த்தியாக உள்ளன. சுற்றுலா பயணிகளை அழைத்து கடலுக்குள் சென்று சுற்றி காட்டுவதற்காக வனத்துறையினர் சார்பில் படகு சவாரி, கயாக்கிங் எனப்படும் துடுப்பு சவாரி ஏற்பாடுகள் செய்துள்ளனர். அலையாத்தி காடுகளுக்கு இடையே செல்லும் போது பறவைகளை கண்டுரசிக்கலாம். குடியரசு தினவிழாவை முன்னிட்டு தொடர் விடுமுறையால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.படகில் பாதுகாப்பு கவச உடையுடன் கடலுக்கு சென்று மாங்குரோவ் காடுகள், பறவைகள் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ