உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பஸ்ஸ்டாண்டில் கூட்டமாக ஆக்கிரமித்துள்ள மாடுகள்

 பஸ்ஸ்டாண்டில் கூட்டமாக ஆக்கிரமித்துள்ள மாடுகள்

முதுகுளத்துார்: -முதுகுளத்துார் பகுதியில் ரோட்டில் கூட்டமாக மாடு உலா வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. முதுகுளத்துார் பேரூராட்சிக்குட்பட்ட காந்தி சிலையிலிருந்து பஸ் ஸ்டாண்ட், பஜார் தெரு, அரசு மருத்துவமனை, போலீஸ் ஸ்டேஷன், ஆற்றுப்பாலம் வரை 300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. ரோட்டோரங்களில் வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகள் அவிழ்த்து விடப்படுவதால் ரோட்டில் சுற்றி திரிகின்றன. வாகனங்களுக்கு இடையூறாக மாடுகள் சுற்றித் திரிவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அவ்வ ப்போது மாடுகள் சண்டையிடுவதால் நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இரவில் மின்தடை ஏற்படும் போது ரோட்டில் மாடு இருப்பது தெரியாமல் விபத்து ஏற்படுகிறது. கால்நடைகளை பறி முதல் செய்து, உரிமையாளர்கள் மீது பேரூராட்சித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி