உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் நீராட குவிந்த பக்தர்கள்

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் நீராட குவிந்த பக்தர்கள்

ராமேஸ்வரம்:-காணும் பொங்கலை முன்னிட்டு, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் நீராடினர்.நேற்று காணும் பொங்கலை யொட்டி தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். முதலில் கோயில் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி விட்டு, கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினார்கள். பின்னர் சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த பூஜையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ