உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / போதை போலீஸ்காரர் சஸ்பெண்ட்

போதை போலீஸ்காரர் சஸ்பெண்ட்

திருவாடானை:துாத்துகுடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்தவர் ஏட்டு செல்வபிரசாத். இவர், மூன்று மாதங்களுக்கு முன் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை போலீஸ் ஸ்டேஷனில் பணிக்கு வந்தார். நேற்று முன்தினம் திருவாடானை அருகே கருமொழி சோதனைச்சாவடியில் பணியில் இருந்தார். இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி இரவு ரோந்து சென்ற போது, செல்வபிரசாத் மது போதையில் துாங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. மேலும், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில், அவர் மது அருந்தியிருந்தது உறுதியானது. எஸ்.பி., தங்கதுரை, செல்வபிரசாத்தை 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி