உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / எமனேஸ்வரம் முருகன் கோயில் ஊருணி துார்வாரப்பட்டு மழை நீர் தேக்கப்படுமா மக்கள் எதிர்பார்ப்பு

எமனேஸ்வரம் முருகன் கோயில் ஊருணி துார்வாரப்பட்டு மழை நீர் தேக்கப்படுமா மக்கள் எதிர்பார்ப்பு

பரமக்குடி : பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் ஜீவா நகர் முருகன் கோயில் ஊருணி வறண்ட நிலையில் துார்வாரி மழை நீரைத் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் பகுதியில் 5க்கும் மேற்பட்ட ஊருணிகள் உள்ளன. இங்கு கடந்த காலங்களில் வீட்டு புழக்கத்திற்கும் மற்றும் குடிநீருக்கும் என ஊருணிகளை பயன்படுத்தி வந்துள்ளனர்.காலப்போக்கில் ஊருணிகளில் ஆக்கிரமிப்பு, கழிவு நீர் தேக்கும் இடமாக மாறி போனது. இந்நிலையில் எமனேஸ்வரம் கிறிஸ்தவ தெரு ஊருணி, உய்ய வந்தாள் அம்மன் கோயில் ஊருணிகள் சீரமைக்கப்பட்டுள்ளது.ஜீவா நகர் முருகன் கோயில் அருகில் உள்ள ஊருணி சீரமைக்கப்படாமல் தண்ணீர் தேக்க வழியின்றி வறண்டுள்ளது. இதனால் கோடைக் காலங்களில் நீர் ஊற்றுக்கு வழியின்றி அப்பகுதியில் கிணறு, ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. எனவே மக்களின் தண்ணீர் தேவையை தீர்க்கும் வகையில் ஊருணியை மேம்படுத்தி தண்ணீர் தேக்கநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்