உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  கார்த்திகை அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடினர்

 கார்த்திகை அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடினர்

ராமேஸ்வரம்: கார்த்திகை அமாவாசையில் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள். கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு நேற்று வந்தனர். அக்னி தீர்த்த கடற்கரையில் திதி, தர்ப்பணம் செய்தனர். இதன் பின் அக்னி தீர்த்ததில் புனித நீராடினர். கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினார்கள். கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் மேலவாசல், அக்னி தீர்த்த கடற்கரை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ