உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலை வாகன காப்பகமாக மாறும் அவலம்

கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலை வாகன காப்பகமாக மாறும் அவலம்

கீழக்கரை : -கீழக்கரை நகருக்குள் நுழையும் முன்பு கிழக்கு கடற்கரை சாலையின் இரு புறங்களிலும் கார் மற்றும் சரக்கு வாகனங்கள் நிறுத்தப்படும் இடமாக மாறி வருகிறது.ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை வழியாக கன்னியாகுமரி, துாத்துக்குடி, திருச்செந்துார், ராமேஸ்வரம், நாகப்பட்டினம், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லக்கூடிய பிரதான சாலையாக கிழக்குக் கடற்கரைச் சாலை விளங்குகிறது.கீழக்கரை நகருக்குள் செல்லும் நுழைவுவாயில் முதல் காஞ்சிரங்குடி ஊராட்சி மற்றும் தில்லையேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட இடங்களில் ஏராளமான வணிக வளாகங்கள், ஓட்டல்கள், கடைகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் புதியதாக கட்டப்பட்டுள்ளன.கிழக்கு கடற்கரை சாலையின் இரு புறங்களிலும் நிரந்தரமாக ஓடாத கார்களை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்திற்கு இடையூறும், விபத்து அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்திற்கு இடையூறாக மாதக்கணக்கில் நிறுத்தப்பட்டுள்ள கார்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை