உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கார் சரக்கு வாகனத்துடன் மோதியதில் ஒருவர் பலி

கார் சரக்கு வாகனத்துடன் மோதியதில் ஒருவர் பலி

தேவிபட்டினம், : விழுப்புரம் மணி நகரை சேர்ந்தவர் பாபு 52. இவர் நேற்று முன்தினம் விழுப்புரத்தில் இருந்து காரில் ராமநாதபுரம் சென்றார். திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை தேவிபட்டினம் அருகே கோப்பேரிமடம் அருகே கார் சென்ற போது மண்டபம் பகுதியில் இருந்து தொண்டி நோக்கி மீன் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியது.இதில் காரை ஓட்டிச்சென்ற பாபு படுகாயம் அடைந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாபு நேற்று இறந்தார். தேவிபட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி