உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பஸ்சில் மேற்கூரை பயணம் : மாணவர்களுக்கு எச்சரிக்கை

பஸ்சில் மேற்கூரை பயணம் : மாணவர்களுக்கு எச்சரிக்கை

முதுகுளத்தூர் : போதிய பஸ் வசதியில்லாததால் தனியார் பஸ் கூரையில் பயணம் செய்த கமுதி கல்லூரி மாணவர்களை போலீசார் எச்சரித்தனர். முதுகுளத்தூர் தொகுதியில் அரசு கல்லூரிகள் இல்லாததால், கமுதியில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிக்கு ஏழை மாணவர்கள் படிக்க செல்வது 30 ஆண்டுகளாக தொடர்கிறது. இந்நிலையில் முதுகுளத்தூரிலிருந்து கமுதிக்கு தனியார் சென்றது. பஸ்சின் மேற்கூரையில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர். பேரையூர் பஸ் ஸ்டாப்பில் பஸ்சை நிறுத்திய போலீசார் மாணவர்களை எச்சரித்தனர். இதில் மாணவர் சிலர் கூறுகையில், ''மேற்கூரையில் பயணம் செய்த மாணவர்கள் போலீசாரால் தாக்கப்பட்டனர்,'' என்றனர். போலீசார் கூறுகையில், ''யாரையும் தாக்கவில்லை,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ