உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் ரயில் நிலையத்தில்  சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை

ராமநாதபுரம் ரயில் நிலையத்தில்  சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ரயில் நிலைய பயணிகள் ஆலோசனை கூட்டத்தில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும், என வலியுறுத்தினர்.ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் ரயில் நிலைய பயணிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் ஆர்.மணிமாறன், வீரபாகு, கார்த்திகேயன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் பயணிகள் நடைமேடைகளில் மாறி செல்வதற்கு ஏதுவாக சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி கூடுதலாக வேண்டும். பயணிகள் அமரும் இடத்தில் விளக்குகள், மின் விசிறிகள் அதிகப்படுத்திட வேண்டும், என அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை