மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
38 minutes ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
38 minutes ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
39 minutes ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
40 minutes ago
ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகரில் மதுரை ரோடு, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை என போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் ரோட்டோர நடைபாதை, பஸ் ஸ்டாப்பை ஆக்கிரமித்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் வாடிக்கையாகியுள்ளது. ராமநாதபுரத்தில் அரண்மனை ரோடு, தலைமை தபால் நிலையம், வண்டிக்காரத் தெரு, கேணிக்கரை ரோடு, ரயில்வே பீடர் ரோடு உள்ளிட்ட இடங்களில் நகரின் மையப்பகுதியாக நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நடை பாதை, பஸ் ஸ்டாப் உள்ளிட்ட இடங்களில் ஆக்கிரமிப்புகள் பெருகியுள்ளன. சில கடைக்காரர்கள் முழுமையாக கம்பி வைத்தும், கட்டடம் அமைத்தும் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள், மக்கள் சிரமப்படுகின்றனர்.இதன் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டும், காணாதது போல உள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே ரோடு ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவிட வேண்டும்.
38 minutes ago
38 minutes ago
39 minutes ago
40 minutes ago