உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ஊரக வளர்ச்சித் துறை  அலுவலர் ஆர்ப்பாட்டம்

 ஊரக வளர்ச்சித் துறை  அலுவலர் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் சார்பில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சங்க மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் சோமசுந்தர், பொருளாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அவுட்சோர்சிங் நியமன முறையை கைவிட வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு சிறப்பு தேர்வு நிலை ஊதியம், மருத்துவ விடுப்பு வழங்க வேண்டும். இணை இயக்குனர், உதவி இயக்குனர், உதவிப்பொறியாளர், ஒன்றிய பொறியாளர் ஆகிய பதவி உயர்வுகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட 18 கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை