உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மது விற்ற 3 பேர் கைது 88 பாட்டில் பறிமுதல்

மது விற்ற 3 பேர் கைது 88 பாட்டில் பறிமுதல்

வாழப்பாடி : ஏத்தாப்பூர் போலீசார், தும்பலில் நேற்று ஆய்வு செய்தனர். அப்-போது அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஆஷா, 54, அவரது வீட்டில் மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்தது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 27 மதுபாட்டில்-களை பறிமுதல் செய்தனர்.அதேபோல் பெரியகிருஷ்ணாபுரம் ஏரியில் மது விற்ற அதே பகு-தியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வெங்கடேஷ், 44, என்பவரை நேற்று முன்தினம் கைது செய்து, 33 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் ஆரியபாளையத்தை சேர்ந்த விவசாயி குமார், 45, அவ-ரது தோட்டத்தில் மது விற்றார். அவரை கைது செய்த போலீசார், 28 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி