உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தடுப்பணையை கண்டித்து விவசாயிகள் போர்க்கொடி

தடுப்பணையை கண்டித்து விவசாயிகள் போர்க்கொடி

சேலம், : அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட மையம் சார்பில் சேலம், கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலர் செல்வராஜ் தலைமை வகித்தார்.அதில் பயிர் காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்தல்; மேகதாது அணை கட்டுமான வரைவு அறிக்கையை மத்திய அரசு நிராகரிப்பதோடு உச்சநீதிமன்ற உத்தரவின்படி தென்பெண்ணையாறு தீர்ப்பாயம் அமைக்க வலியுறுத்தி, கோஷம் எழுப்பினர்.இ.கம்யூ., மாவட்ட செயலர் மோகன் பேசுகையில், ''தமிழக அரசு நெல் குவிண்டாலுக்கு, 500 ரூபாய்; கரும்பு டன்னுக்கு, 500 ரூபாய், கொப்பரை தேங்காய் கிலோவுக்கு, 50 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும். பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு, தடுப்பணை கட்டுவதை தடுக்க, தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் முறையிட வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை