உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / செம்மண் கடத்தலில் ஈடுபட்டு தப்பியோடிய வாலிபர் கைது

செம்மண் கடத்தலில் ஈடுபட்டு தப்பியோடிய வாலிபர் கைது

தலைவாசல்: தலைவாசல் அருகே, இலுப்பநத்தம் ஏரி பகுதியில் செம்மண் கடத்துவதாக, சேலம் கலெக்டர் பிருந்தாதேவிக்கு புகார் சென்-றது. அவரது உத்தரவுபடி கடந்த, 13ல், ஆத்துார் ஆர்.டி.ஓ., பிரி-யதர்ஷினி தலைமையிலான வருவாய்த்துறையினர் ஆய்வு செய்-தனர். அப்போது, மண் கடத்தலில் ஈடுபட்டிருந்த டிப்பர் லாரி, பொக்லைன் வாகனத்துடன் தப்பியோடினர். இதுகுறித்து, வி.ஏ.ஓ., தாஜூதீன் அளித்த புகார்படி, வீரகனுார் போலீசார் விசா-ரணை நடத்தினர். அதில், பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்-தட்டை அருகே, நுாத்தப்பூரை சேர்ந்த செல்வராசு, 34, என்பது தெரியவந்தது.நேற்று அவரை கைது செய்து, டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ