உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மக்களை தேடி மருத்துவ ஊழியர் சுங்கச்சாவடியில் சாலைமறியல்

மக்களை தேடி மருத்துவ ஊழியர் சுங்கச்சாவடியில் சாலைமறியல்

வாழப்பாடி: 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தில் பணி-புரியும் ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நேற்று போராட்டம் நடத்த திட்டமிட்டனர். இதற்கு சேலத்தில் இருந்து, 3 வேன்களில் சென்னை நோக்கி, 100க்கும் மேற்பட்டோர் புறப்பட்டனர். நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30க்கு அவர்களை, வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவ-டியில் வாழப்பாடி போலீசார் தடுத்தனர். இதனால் ஊழியர்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஊழி-யர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். இருப்-பினும் அவர்கள் செல்ல, போலீசார் அனுமதிக்-கவில்லை. இதனால் வேறு வழியின்றி, அவர்கள் மீண்டும் சேலம் நோக்கி திரும்பிச்-சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை