உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / திறன் வளர்க்கும் பயிற்சி இளைஞர்களுக்கு அழைப்பு

திறன் வளர்க்கும் பயிற்சி இளைஞர்களுக்கு அழைப்பு

சேலம்: ஊரக இளைஞர்களுக்கு திறன் வளர்க்கும் பயிற்சி நடத்தப்பட உள்ளதால், விருப்பமுள்ள இளைஞர்கள் முன்பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சேலம் வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் அறிக்கை:சேலம் மாவட்ட ஊரக இளைஞர்களுக்கு, 'அட்மா' திட்டத்தில், 'அங்கக' வேளாண்மை(ஆர்கானிக் பார்மிங்) தொடர்பான திறன் வளர்க்கும் பயிற்சி, ஜூலை, 22 முதல், 27 வரை, 6 நாட்கள், சீலநாயக்கன்பட்டியில் உள்ள உழவர் பயிற்சி நிலையத்தில் நடக்க உள்ளது.இதில் பயிற்சி பெற, ஊரக பகுதிகளில் வசிக்கும், 18 வயது பூர்த்தியடைந்த, 5ம் வகுப்பு படித்துள்ள இளைஞர்கள், 99449 80444, 97895 10248 என்ற எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். 6 நாட்களும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி நிறைவில் மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை