உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தலைமை ஆசிரியரை தாக்கிய பள்ளி சமையலரின் கணவர்

தலைமை ஆசிரியரை தாக்கிய பள்ளி சமையலரின் கணவர்

இடைப்பாடி: சேலம் மாவட்டம் கொங்கணாபுரம், வாழகுட்-டப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் குமார், 47. அங்கு சமையல-ராக சுதா, 31, என்பவர் பணிபுரிகிறார்.இவரது கணவர் பாலமுருகன், 45. இவர் நேற்று காலை, 10:00 மணிக்கு பள்ளியில் புகுந்து, குமாரின் முகத்தில் கைகளால் தாக்கி-யுள்ளார். காயம் அடைந்த குமார், அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்-பட்டார். முன்னதாக பள்ளிக்கு சென்று கொங்க-ணாபுரம் போலீசார் விசாரித்தனர். அப்போது வழக்கு வேண்டாம் என, குமார் கூறியுள்ளார்.பள்ளியில் நடந்த சம்பவம் என்பதால் புகார் கொடுக்க போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி ஆசிரியர் புகார் கொடுத்தார். போலீசார் கூறுகையில், 'கள்ளத்தொடர்பு வைத்துள்ளீரா என கேட்டு பாலமுருகன் தாக்-கியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடக்கிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி