உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வீடு புகுந்து நகை திருட்டுபெண்ணுக்கு 3 ஆண்டு

வீடு புகுந்து நகை திருட்டுபெண்ணுக்கு 3 ஆண்டு

சேலம்;சேலம், கன்னங்குறிச்சி, புது ஏரியை சேர்ந்த, ரயில்வே அலுவலர் சண்முகம், 53. இவரது வீட்டில், 2022 அக்., 20ல், 7 பவுன் நகை, 30,000 ரூபாய் திருடுபோனது. இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, நரசோதிப்பட்டியை சேர்ந்த தமிழ்செல்வி, 37, என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் ஜே.எம்.எண்: 4ல் நடந்தது. அதில் தமிழ்செல்விக்கு, 3 ஆண்டு சிறை தண்டனை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் யுவராஜ் நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ