உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அங்கன்வாடி கட்டட சுவர் இடிந்தது திறக்காததால் அசம்பாவிதம் தவிர்ப்பு

அங்கன்வாடி கட்டட சுவர் இடிந்தது திறக்காததால் அசம்பாவிதம் தவிர்ப்பு

வேலுார், வேலுார் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த சாலைப்பேட்டை கிராமத்தில் அங்கன்வாடி மைய கட்டடம் சேதமானதால், சூரியகலா என்பவருக்கு சொந்தமான பழைய வீட்டில் வாடகைக்கு அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இதில், 30 குழந்தைகள் படிக்கின்றனர். இரு நாட்களாக பலத்த மழை பெய்வதால், வீட்டின் சுவரில் ஈரமேறி நேற்று காலை, 8:00 மணியளவில் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக குழந்தைகள் உள்ளிட்ட யாரும் இல்லாததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து பேரணாம்பட்டு வருவாய்த்துறையினர் மற்றும் பேரணாம்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை