@facebook@@@facebook@@ பால் அளவையர் கைது
தலைவாசல், தலைவாசலை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ், 25. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில், கொள்முதல் அளவையராக பணிபுரிகிறார். இவர், 9 வயது சிறுமியிடம், மொபைல் போனில் ஆபாச படங்களை காட்டி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமி, அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். தொடர்ந்து பெற்றோர் புகார்படி, ஆத்துார் மகளிர் போலீசார், 'போக்சோ' வழக்குப்பதிந்து, நேற்று ஜெயபிரகாைஷ கைது செய்தனர். அவருக்கு திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளது, விசாரணையில் தெரியவந்தது.