விசைப்படகு போக்குவரத்து மீண்டும் தொடக்கம்
இடைப்பாடி, சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால், பூலாம்பட்டியில் இருந்து ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டைக்கு, காவிரி ஆற்றில் இயக்கப்படும் விசைப்படகு போக்குவரத்து கடந்த, 22ல் நிறுத்தப்பட்டது. தற்போது காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ள நீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனால், நேற்று முதல், பூலாம்பட்டி காவிரி ஆற்றில் விசைப்படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.