கார்த்திகைக்கு முந்தைய ஞாயிறு இறைச்சி விற்பனை அமோகம்
சேலம்: சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள், கார்த்தி-கையில் அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவர். அதன்படி இன்று கார்த்திகை மாதம் தொடங்க உள்ள நிலையில், ஞாயிறான நேற்று, சேலத்தில் பெரும்பாலானோர் வழக்கத்தை விட அதிக-ளவில் அசைவ வகைகளை வாங்கினர். ஆடு, கோழி, மீன் உள்-ளிட்ட இறைச்சி கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலை-மோதியது. விற்பனை வழக்கத்தை விட அமோகமாக நடந்தது. விலை வழக்கம்போல், ஒரு கிலோ ஆட்டுக்கறி, 600 முதல், 850 ரூபாய் வரை, அந்தந்த பகுதிக்கு தகுந்தபடி விற்பனையானது. கோழி வகைகளில் பிராய்லர், வான்கோழி கிலோ, 190 முதல், 500 ரூபாய்; மீன் வகைகள் கிலோ, 140 முதல், 250 ரூபாய்; வஞ்-சிரம் கிலோ, 1,200 ரூபாய்க்கு விற்பனையானது.