உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பஸ் ஸ்டாண்டில் குடிமகன் ரகளை மறுவாழ்வு மையத்தில் சேர்த்த போலீசார்

பஸ் ஸ்டாண்டில் குடிமகன் ரகளை மறுவாழ்வு மையத்தில் சேர்த்த போலீசார்

ஆத்துார்: ஆத்துார் பஸ் ஸ்டாண்ட் செல்லும் நுழைவாயில் பகுதியில் ஒருவர், சட்டை அணியாமல் அரை நிர்வாண கோலத்தில் நேற்று மதியம் நின்று-கொண்டு, அந்த வழியே செல்வோரிடம் ரக-ளையில் ஈடுபட்டார். ஒரு பெண்ணிடம், சங்கிலி பறிக்க முயன்றார். அவரை மக்கள் பிடிக்க முயன்றதால், அருகே இருந்த ஜவுளி கடையில் புகுந்தார். பின் மக்கள் தகவல்படி, ஆத்துார் டவுன் போலீசார் அங்கு வந்-தனர். அப்போது அந்த நபர், 'சினிமா சூட்டிங் போலீசா? நிஜமான போலீசா?' என கேள்வி எழுப்-பினார்.பின் போலீசார், அவரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்ததில், ஆத்துார், பார-தியார் தெருவை சேர்ந்த ஹரி, 23, என்பதும், 'போதை'யில் ரகளையில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதுபோன்று அடிக்கடி ரகளையில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதனால் அவரை, சேலத்தில் உள்ள மறுவாழ்வு மையத்தில், போலீசார் ஒப்படைத்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை