உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலத்தில் ஸ்ரீமத் பாகவதம் பாராயணம்

சேலத்தில் ஸ்ரீமத் பாகவதம் பாராயணம்

சேலம், சேலத்தில் ஸ்ரீமத் பாகவதம் பாராயணம் நிகழ்ச்சி, ஜூலை 17 முதல், 23 வரை நடக்கிறது.சேலம், ஸ்ரீஆண்டாள் அடியார் குழாம் அமைப்பாளர் ஸத்யராம் ஆச்சார்யர் கூறியிருப்பதாவது:சேலத்தில் முதன்முறையாக, ஸ்ரீமத் பாகவதம் ஸப்தாகம் மூல பாராயணமும், சொற்பொழி வும், தொடர்ந்து 7 நாட்கள் சேலம் செவ்வாய்பேட்டை, ஸ்ரீ ருக்மணி சமேத பாண்டுரங்கநாதர் கோவில் அருகில் உள்ள ஸ்ரீ ரெங்கா மஹாலில் நடைபெற உள்ளது.காலை 6:30 மணி முதல் இரவு 8:45 வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில், திருப்பள்ளியெழுச்சி, குடும்ப சங்கல்பம், ஸ்ரீ மத் பாகவதம் மூல பாராயணம், ஸ்ரீ விஸ்ணு ஸஹஸ்ரநாமம், மங்கள ஆரத்தி, பிரசாதம் வினியோகம் உள்ளிட்டவை நடைபெற உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை