துக்க வீட்டில் நாட்டு வெடி வெடித்த போது தீப்பொறி விழுந்ததில் கார் எரிந்து நாசம்
நாமக்கல்: துக்க வீட்டில் நாட்டு வெடி வெடித்தபோது, தீப்பொறி விழுந்ததில் கார் தீப்பிடித்து வெடித்து சிதறி முற்றிலும் எரிந்து நாசமானது.நாமக்கல் - சேலம் சாலை, பொம்மைக்குட்டைமேடு அருகே உள்ள தாளம்பாடியை சேர்ந்தவர் ராமசாமி மனைவி செல்-லம்மாள், 85. வயது மூப்பின் காரணமாக, நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதையடுத்து, ப.வேலுார் அடுத்த கொந்த-ளத்தை சேர்ந்த நகுல்ராஜ், 45, என்பவர், நண்பர் செல்வத்துக்கு சொந்தமான, 'இன்னோவா' காரை எடுத்துக்கொண்டு, சின்னதாரா-புரம் கன்னிவாடியில் உள்ள பட்டாசு கடையில், 15 நாட்டு வெடி சரம் வாங்கியுள்ளார்.தொடர்ந்து, நேற்று மதியம், 12:00 மணிக்கு துக்க வீட்டின் அருகே, காரை நிறுத்தி டிக்கியை திறந்து, இரண்டு நாட்டு வெடி சரத்தை, அங்குள்ள மரத்தில் கட்டி பற்ற வைத்தனர். வெடி வெடித்ததில் தீப்பொறி பறந்து, கார் டிக்கியில் வைக்கப்பட்டி-ருந்த நாட்டு வெடி சரத்தில் விழுந்தது. அதில் தீப்பிடித்து, நாட்டு வெடிகள் வெடித்து சிதறின. இதில், டீசல் டேங்கில் தீப்பற்றி கார் கொழுந்துவிட்டு எரிந்தது. இதையடுத்து, நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்-துக்கு விரைந்து சென்று, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில், கார் பாகங்கள் வெடித்து நாலா பக்கமும் சிதறி-யதால், மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. நல்லிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.