உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காற்று, மின்னலுடன் மழை இடியால் தென்னை மரம் எரிந்தது

காற்று, மின்னலுடன் மழை இடியால் தென்னை மரம் எரிந்தது

ஓமலுார்,காடையாம்பட்டி, அதன் சுற்றுப்பகுதிகளில் நேற்று மாலை முதல், காற்று, இடி, மின்னல் ஏற்பட்டது. இரவு, 9:00 மணிக்கு, பூசாரிப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவில் பின்புறம் இருந்த தென்னை மரத்தில் இடி தாக்கியது.இதில் மரம் கொழுந்து விட்டு எரிந்தது. சிறிது நேரத்தில் தானாக அணைந்துவிட்டது. சில இடங்களில் சாரல் மழை பெய்தது. ஏற்காட்டில் இரவு, 9:05 மணிக்கு பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தது. 9:40 மணி வரை கொட்டி தீர்த்தது. அயோத்தியாப்பட்டணம் சுற்றுவட்டார பகுதிகளில் மித மழை, வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது.சங்ககிரியில் மாலை, பலத்த காற்று, இடியுடன் தொடங்கிய கனமழை, 3 மணி நேரம் கொட்டியது. அங்கு, சேலம், இடைப்பாடி, திருச்செங்கோடு பஸ் ஸ்டாப்புகளில் நிழற்குடை இல்லாததால், பஸ்சுக்கு காத்திருந்த பயணியர், மழையால் சிரமத்துக்கு ஆளாகினர்.அதேபோல் இடைப்பாடி அதன் சுற்றுப்பகுதிகளில் பலத்த காற்று, இடியுடன் கூடிய கனமழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை