உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கீழே கிடந்த மோதிரம் ஒப்படைத்த மாணவர்கள்

கீழே கிடந்த மோதிரம் ஒப்படைத்த மாணவர்கள்

கீழே கிடந்த மோதிரம்ஒப்படைத்த மாணவர்கள் தலைவாசல், நவ. 10-தலைவாசல் அருகே காமக்காபாளையம், இலுப்பநத்தத்தை சேர்ந்த, பிளஸ் 2 மாணவர்கள் அஸ்வின்குமார், மகிழன், விஷால், ஹரிஹரன். இவர்கள் தலைவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கின்றனர். நேற்று மாலை, 5:00 மணிக்கு தலைவாசலில் தனியார் பயிற்சி மையத்துக்கு சென்றுகொண்டிருந்தபோது, சாலையில், அரை பவுன் மோதிரம் கிடந்தது. அதை எடுத்த மாணவர்கள், தலைவாசல் ஸ்டேஷனுக்கு சென்று, போலீசாரிடம் ஒப்படைத்தனர். மாணவர்களை, போலீசார் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !