உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குரூப் 1 தேர்வு 1766 பேர் பங்கேற்பு

குரூப் 1 தேர்வு 1766 பேர் பங்கேற்பு

சிவகங்கை, : காரைக்குடியில் 10 தேர்வு மையங்களில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வினை 1766 பேர் எழுதினர். டி.என்.பி.எஸ்.சி., சார்பில் துணை கலெக்டர், டி.எஸ்.பி., உதவி கமிஷனர், கூட்டுறவு துணை பதிவாளர், உதவி இயக்குனர் ஊரக வளர்ச்சி துறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கான குரூப் 1 முதன்மை கொள்குறி வகை தேர்வு நேற்று காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடந்தது.சிவகங்கை மாவட்டத்தில் 2703 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான தேர்வு நேற்று காரைக்குடியில் உள்ள அழகப்பா கல்வி நிறுவன வளாகங்களில் உள்ள 10க்கும் மேற்பட்ட மையங்களில் நடந்தது. இதில் 1766 பேர் தேர்வு எழுதினர். 937 பேர் ஆப்சென்ட்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை