உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் 20 பேர் காயம் சித்திரை திருவிழா ஜல்லிக்கட்டு  காளைகள் முட்டியதில் 20 பேர் காயம்

ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் 20 பேர் காயம் சித்திரை திருவிழா ஜல்லிக்கட்டு  காளைகள் முட்டியதில் 20 பேர் காயம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் நல்லேந்தல் கிராமத்தில் தர்ம முனீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அரசு அனுமதியுடன் ஜல்லிக்கட்டு நடந்தது. காளைகள் முட்டியதில் 20 பேர் காயமடைந்தனர்.காளையார்கோவில் அருகே உள்ள நல்லேந்தல்கிராமத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. காலை 8:00 மணிக்கு அரசு வழிகாட்டுதல்படி மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், விழா குழுவினர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர். முதலில் கிராம கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 600 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 90 மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்பட்டனர். பெரும்பாலான காளைகள் மாடுபிடி வீரர்களுக்கு பிடி கொடுக்காமல் களத்தில் நின்று விளையாடின. போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் 20 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவகுழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஜல்லிக்கட்டையொட்டி 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை