உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சாலைக்கிராமம் கோயிலில் குருபூஜை, முற்றோதல் விழா

சாலைக்கிராமம் கோயிலில் குருபூஜை, முற்றோதல் விழா

சாலைக்கிராமம்: சாலைக்கிராமம் திருக்காம கோடீஸ்வரி உடனுறை வரகுணேஸ்வரர் கோயிலில் அருணகிரிநாதர்குருபூஜை விழா ஜூன் 22, 23ம் தேதி நடைபெறஉள்ளது. ஆனி மூல நட்சத்திரத்தில் அருணகிரிநாதர் சுவாமி முக்தியடைந்த நாளன்று குரு பூஜை விழா ஆண்டுதோறும் முருக பக்தர்களால் கொண்டாடப்படுவது வழக்கம். இதனை முன்னிட்டு வரகுணேஸ்வரர் கோயிலில்உள்ள முருகப்பெருமானுக்கு அபிஷேக, ஆராதனை,அஸ்டோத்திர நாமாவளி பூஜை ஜூன் 22ம் தேதி காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளது.அதனைத் தொடர்ந்து அன்று மாலை 5:00 மணிக்கு அருணகிரிநாதர்மற்றும் கிருபானந்த வாரியார் மற்றும் முருகேச சுவாமிகள் ஆகியோரின் படம் கோயிலிலிருந்து புறப்பட்டு திருவீதி ஊர்வலம் திருப்புகழ் பாராயணத்துடன் நடைபெற உள்ளது.மறுநாள் 23ம்தேதி திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை சாலைக்கிராமம் அருணகிரிநாதர் பக்த சபை,திருச்செந்துார் பாதயாத்திரை குழு, இளையான்குடி மாற நாயனார் அடியார் திருக்கூட்டத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி