கொலை வழக்கில் சிறுவன் உட்பட 3 பேர் கைது
மானாமதுரை; மானாமதுரை அருகே உள்ள அன்னவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் காளீஸ்வரன் 20, இவர் மைக் செட் அமைக்கும் வேலை பார்த்தார். இவர் நேற்று முன்தினம் சங்கமங்கலம் கிராமத்தில் புதுமனை புகுவிழாவிற்காக மைக் செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது 3 டூவீலர்களில் வந்த 9 பேர் காளீஸ்வரனை 20 வெட்டியதில் பலியானார். இந்த வழக்கில் மானாமதுரை போலீசார் ஏற்கனவே சிறுவன் உட்பட 6 பேரை கைது செய்திருந்த நிலையில் நேற்று மேலும் ஒரு சிறுவன் மற்றும் கீழப்பசலை கிராமத்தைச் அஜய்22,ஜனார்த்தனன் 22, ஆகிய 3 பேரை கைது செய்தனர்.