கோட்டையம்மன் கோயிலில் ஆடி விழா
தேவகோட்டை; தேவகோட்டை எல்லை காவல் தெய்வமான கோட்டையம்மன் கோயில் ஆடி திருவிழாவிற்காக மேடை போடுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. பீடத்திற்கு அபிஷேகம் நடந்தது. கோயிலில் மதியம் முதல் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகளை தொடர்ந்து திருவிழா தொடங்கியது. ஜூலை 25 ந்தேதி காலை 8 மணிக்கு பால்குடமும், மாலை பூத்தட்டு ஊர்வலமும் நடைபெறுகிறது.