உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  பழைய பஸ் ஸ்டாண்ட் முன் ரோட்டை ஆக்கிரமித்த பஸ்கள்

 பழைய பஸ் ஸ்டாண்ட் முன் ரோட்டை ஆக்கிரமித்த பஸ்கள்

காரைக்குடி: காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் முன் போட்டி போட்டுக் கொண்டு அனைத்து பஸ்களையும் தாறுமாறாக நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காரைக்குடியிலிருந்து தேவகோட்டை, திருவாடானை, மதுரை, திருச்சி,ராமநாதபுரம், விருதுநகர், கோயம்புத்துார், சென்னைக்கு பஸ்கள் சென்று வருகிறது. கிராமங்களுக்கென 20 க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் செல்கின்றன. இப்பழைய பஸ் ஸ்டாண்ட் புனரமைக்கும் பணி பல மாதங்களாக நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் முடிந்தும் பஸ் ஸ்டாண்ட் திறக்கப் படவில்லை. இதனால் மெயின் ரோட்டிலேயே அனைத்து பஸ்களையும் நிறுத்தி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் பழைய பஸ் ஸ்டாண்டை திறந்து, வாகன நெரிசலை குறைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
டிச 22, 2025 10:16

காரைக்குடி பழைய பேருந்து நிலையம். கடந்த காலங்களில் இதன் அருமை... அங்கு இரண்டு உணவகங்கள் இருந்தன பழ கடைகள் இருந்தன டி ஸ்டால்லகளும் இருந்தன. இரவு வரும் பயணிகளுக்கு உறங்குவதற்கு கோரை பாய்கள் வாடகைக்கு கொடுக்கப்பட்டன. தென் கொடியில் அமைந்திருந்த கழிப்பறை வசதிகள்.. மோசமில்லை. எனது பார்வையில் பழைய பேருந்து நிலையம் அன்றைய துங்கா நகரம் போல இருந்தது. காரைக்குடியில் முனிசிபல் புலடிங் அருகில் புதிய பேருந்து நிலையம் மாற்றத்திற்கு பின்னர் பொலிவு இழந்துவிட்டது. என்னை கேட்டால் அங்கு டவுன் பஸ்களும் மினி பஸ்களும் விரைவில் கிளம்பி காரைக்குடியில் பெருமையை சாற்றவேண்டும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை