குழந்தைகள் தினம்
சிவகங்கை: கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. ஆசிரியர் ராஜபாண்டி வரவேற்றார். ஆசிரியர் ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. கணித ஆசிரியர்கள் கமலாபாய், வாசுகி, வித்யா கலந்துகொண்டனர். ஆசிரியர் மீனாட்சி நன்றி கூறினார்.