உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  சென்னையை தவிர மற்ற நகர்களுக்கு மெட்ரோ ரயில் தேவையில்லை: கார்த்தி

 சென்னையை தவிர மற்ற நகர்களுக்கு மெட்ரோ ரயில் தேவையில்லை: கார்த்தி

திருப்புத்தூர்: ''தமிழகத்தில் சென்னை தவிர மற்ற நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் தேவையில்லை,'' என, சிவகங்கை மாவட்டம் திருப்புத்துாரில் காங்., எம்.பி., கார்த்தி தெரிவித்தார். அவர் கூறியதாவது: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் ஏற்கக்கூடியதே. ஆனால் வாக்காளர் நீக்கப்பட தகுந்த ஆதாரங்கள், ஆவணங்கள் அளிக்க வேண்டும். முப்பது நாட்களுக்குள் வாக்காளர் பட்டியலை திருத்த முடியுமா என்பது தான் கேள்வி. தேர்தல் கமிஷனுக்கு 2026ல் தமிழக சட்டசபைத்தேர்தல் வரும் என்பது தெரியும். 2025 ஜனவரியிலேயே சிறப்பு தீவிர திருத்தப்பணியை துவக்கியிருக்கலாம். திருத்தப்பணிக்கான ஊழியர்களுக்கு போதிய பயிற்சியும் இல்லை. ஓட்டுச்சாவடி அலுவலர்களால் வாக்காளர்களின் சந்தேகங்களை தீர்க்க முடியவில்லை. வாக்காளர் திருத்தம் செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை. பீஹார் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி தமிழர்கள் பீஹாரிகளை அடிக்கிறார்கள் எனக்கூறினார். தமிழகத்தில் தேர்தல் வந்தால் 'தமிழ் கற்றுக் கொள்ளவில்லையே' என கூறுகிறார். அடுத்த ஆறு மாதங்களுக்கு அவருக்கு பிடித்த உணவு கேரளா, தமிழ்நாடு, அஸ்ஸாம், பெங்கால், புதுச்சேரி சாப்பாடு தான். அந்த மாநிலங்களின் நடனம், கலாசாரம், மொழிதான் அவருக்கு பிடிக்கும். அந்த ஆடைகள் தான் அவருக்கு பிடிக்கும். என்னைப்பொறுத்தவரை சென்னையைத் தவிர தமிழகத்தில் மெட்ரோ ரயில் மற்ற நகர்களுக்கு தேவையில்லை. இந்தூர், ஆக்ரா போன்றவற்றில் போடப்பட்ட மெட்ரோ திட்டங்களும் வீணாகி விட்டது. பீஹாருக்கு ரூ.50,000 கோடி திட்டம் அறிவித்துள்ளனர். பீஹார் தேர்தல் முடிவுக்கும், தமிழக தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தமிழகத்தில் எத்தனை முனை போட்டி வந்தாலும் தி.மு.க., தலைமையிலான காங்., அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றிபெறும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி