உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் இரண்டரை ஆண்டில் 6 கமிஷனர் மாற்றம் திணறும் நகராட்சி நிர்வாகம்

சிவகங்கையில் இரண்டரை ஆண்டில் 6 கமிஷனர் மாற்றம் திணறும் நகராட்சி நிர்வாகம்

சிவகங்கை: சிவகங்கை நகராட்சியில் 2021ல் உள்ளாட்சி அமைப்பு பதவியேற்பிற்கு பின் இரண்டரை ஆண்டிற்குள் 6 கமிஷனர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.சிவகங்கை நகராட்சி 27 வார்டுகளை கொண்டு, 50 ஆயிரம் மக்கள் தொகையுடன் செயல்படுகிறது. இந்நகராட்சியுடன் காஞ்சிரங்கால், வாணியங்குடி, சூரக்குளம் புதுக்கோட்டை போன்ற ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களை இணைத்து, வருவாயை பெருக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கான கோரிக்கையை அரசிடம் நகராட்சி தலைவர், கவுன்சிலர்கள் வைத்துள்ளனர். இந்நிலையில் 2021 மே மாதம் நகராட்சி தலைவர், கவுன்சிலர் உள்ளிட்டோர் பதவியேற்றனர். இவர்கள் பதவியேற்ற இரண்டரை ஆண்டிற்குள் 6 கமிஷனர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.நகராட்சிக்கு புதிதாக வரும் கமிஷனர்கள் புரிந்து கொள்வதற்கே முடியாத நிலையில், நிர்வாகம் என்பது கடந்த இரண்டரை ஆண்டாக கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. வரி வருவாய், நகராட்சி கடைகள்வரி பாக்கி, சொத்து, குடிநீர், காலிமனையிட வரி உட்பட கோடிக்கணக்கான ரூபாய் வரி வசூல் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கமிஷனர்வேங்கடலட்சுமணன்பதவியேற்ற சில காலத்திலேயே நகராட்சிக்கு வரவேண்டிய வரி பாக்கியை வசூல் செய்தார். துாய்மை பணியாளர்களுக்கு செலுத்த வேண்டிய எல்.ஐ.சி., இ.பி.எப்., நிதியின் சொற்ப தொகையை செலுத்தும் அளவிற்கு நகராட்சியை திறம்பட நடத்தினார். இந்நிலையில், குளச்சலில் கமிஷனராக இருந்த செந்தில்குமாருக்கு, கவுன்சிலர்களிடம் எதிர்ப்பு கிளம்பவே அவரை சிவகங்கைக்கு மாற்றினர். இங்கிருந்த வேங்கடலட்சுமணனை குளச்சல் நகராட்சி கமிஷனராக இடமாற்றம் செய்தனர்.அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடர்ந்து கமிஷனர்கள் மாற்றப்படுகின்றனர். அடிக்கடி இங்கு வரும் கமிஷனர்கள் மாற்றப்படுவது வாடிக்கையாகி வருகிறது. எப்படியோ சிவகங்கை நகரில் குப்பை கொட்ட இடம், தடையில்லா குடிநீர் வினியோகம், தெருவிளக்கு பராமரிப்பு பணி நடந்தால் சரி என வரிசெலுத்தும் மக்கள் புலம்பி தவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை