| ADDED : டிச 03, 2025 06:06 AM
சிவகங்கை: சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட திருமலை மலைமீதுள்ள மலைக்கொழுந்தீஸ்வரர் கோயிலின் உப கோயிலான அடிவாரத்தில் உள்ள கடம்பவன அய்யனார் கோயில் புனரமைக்கப்பட்டது. இக்கோயிலில் கும்பாபிேஷகம் நடத்த கிராமத்தினர் திட்டமிட்டனர். இக்கோயிலில் டிச., 6 ம் தேதி காலை 10:35 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, இரவு 7:00 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜை, பூர்ணா ஹூதியுடன் துவங்குகிறது. டிச., 7ம் தேதி காலை 6:30 மணிக்கு கோபூஜை, வேதபாராயணம், நாடி சந்தன பூஜை செய்து, அன்று காலை 9:45 மணி முதல் 10:45 மணிக்குள் கடம்பவன அய்யனார் கோயில் கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தி வைக்கின்றனர். தேவஸ்தான கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையில் கணேச குருக்கள், சேதுநகர் மக்கள் கும்பாபிேஷக ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.